வானுக்கு தந்தை எவனோ பாடல் வரிகள் | Vaanukku Thanthai Song Lyrics | Aadu Puli Aattam
ஆண் : வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
பெண் : லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
ஆண் : வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
ஆண் : நபிகள் பெருமான்
மெக்கா விட்டு மதீனா
நடந்து பட்ட துன்பம்
நமக்கெல்லாம் வருமா
அந்த நாளை நினைக்கட்டும் நெஞ்சம்
ஆயிரம் தரம் சொல்வேன்
நம் துன்பம் கொஞ்சம்
அவனுக்கு முன்னால்
இங்கு எல்லோரும் மந்தை
ஆண் : அனாதி யாருமில்லை
அவனேதான் தந்தை
அனாதி யாருமில்லை
அவனேதான் தந்தை
பெண் : லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
ஆண் : வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
ஆண் : கோவில் கண்டு சொல்லு
உந்தன் கவலை
போகின்ற வழியெங்கும்
காத்து நிற்கும் சிலுவை
வானில் மூன்றாம் பிறை வரும் போது
வாசலில் துண்டையிட்டு திருக் குரான் ஓது
துயரத்தை அங்கே சொன்னால்
சுகமாகும் சிந்தை
ஆண் : அனாதி யாருமில்லை
அவனேதான் தந்தை
அனாதி யாருமில்லை
அவனேதான் தந்தை
பெண் : லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
லா இலாஹா இல்லல்லாஹு
முஹம்மதுர் ரஸூலுல்லாஹி
ஆண் : வானுக்கு தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளை தானே யாரும்
Reviewed by Tamil Info
on
December 05, 2020
Rating:
