Recent comments

உறவோ புதுமை பாடல் வரிகள் | Uravo Puthumai Song Lyrics | Aadu Puli Aattam


 

ஆண் : உறவோ புதுமை

நினைவோ இனிமை

உறவோ புதுமை

நினைவோ இனிமை

கனிந்தது இளமை

காதலின் பெருமை


ஆண் : உறவோ புதுமை

நினைவோ இனிமை


ஆண் : காற்றினில் ஆடும்

கொடி மலர் போலே

கண்களில் ஆடும்

ஒளி மலர் கண்டேன்


ஆண் : காற்றினில் ஆடும்

கொடி மலர் போலே

கண்களில் ஆடும்

ஒளி மலர் கண்டேன்


ஆண் : பார்த்ததும் நெஞ்சில்

பரவசம் கொண்டேன்

பார்த்ததும் நெஞ்சில்

பரவசம் கொண்டேன்

பாவையின் ஜாடையில்

எனை நான் மறந்தேன்


ஆண் : உறவோ புதுமை

நினைவோ இனிமை


ஆண் : தேவன் கோயில்

நாதம் உன் மொழியோ

திருச்சபை ஒலிக்கும்

கீதம் உன் குரலோ


ஆண் : தேவன் கோயில்

நாதம் உன் மொழியோ

திருச்சபை ஒலிக்கும்

கீதம் உன் குரலோ


ஆண் : மார்கழி மாதத்தின்

மலர்கள் உன் உடலோ

மார்கழி மாதத்தின்

மலர்கள் உன் உடலோ

மாங்கனி இதழ்களில்

தவழ்வதென் உயிரோ


ஆண் : உறவோ புதுமை

நினைவோ இனிமை


ஆண் : எங்கோ பிறந்தோம்

எங்கோ வளர்ந்தோம்

எவ்விதம் நாம் இன்று

ஒன்றாய் இணைந்தோம்


ஆண் : எங்கோ பிறந்தோம்

எங்கோ வளர்ந்தோம்

எவ்விதம் நாம் இன்று

ஒன்றாய் இணைந்தோம்


ஆண் : ஒருவரை ஒருவர்

சந்திக்கும் நேரம்

ஒருவரை ஒருவர்

சந்திக்கும் நேரம்

உறவுகள் ஆயிரம்

திறந்திடும் காலம்


ஆண் : உறவோ புதுமை

நினைவோ இனிமை

கனிந்தது இளமை

காதலின் பெருமை


ஆண் : உறவோ புதுமை

நினைவோ இனிமை

உறவோ புதுமை

நினைவோ இனிமை

விசில் : ………………………………………

உறவோ புதுமை பாடல் வரிகள் | Uravo Puthumai Song Lyrics | Aadu Puli Aattam உறவோ புதுமை பாடல் வரிகள் | Uravo Puthumai Song Lyrics | Aadu Puli Aattam Reviewed by Tamil Info on December 05, 2020 Rating: 5

About