இரவிங்கு தீவாய் பாடல் வரிகள் | Iravingu Theevai Song Lyrics | 96
பெண் : இரவிங்கு தீவாய்
நம்மை சொல்லுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய்
அலை மோதுதே
உடலிங்கு சாவாய் அழுதே
ஆண் மற்றும் பெண் :
பிரிவே உருவாய்
கரைந்து போகிறேன்
உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்
ஆண் : மலைகளின் நதிபோல்
மனம் வழிந்து வந்தாய்
வருண்டிடும் நிலத்தில்
பல கடல்கள் தந்தாய்
கனவே துணையாய்
ஒழிந்து போகட்டும்
ஆண் : இரவிங்கு தீவாய்
நம்மை சொல்லுதே
விடியலும் இருளாய் வருதே
பெண் : இந்த தாமரை
குளம் மீறி தனி ஆகுதே
அதன் சூரியன்
பகல் இன்றி வெயில் காயிதே
ஒரு பாதையில்
இரு ஜீவன் துணை தேடுதே
ஆண் மற்றும் பெண் :
அட காலங்கள்
தடை மீறி தடை போடுதே
நீ இன்றி நானே தினம்
வாழ்வதொரு வாழ்வா
வாழவே வா
நீ தான் உயிரின் உயிரே
வரவா… வரவா…
ஆண் : தினம் தினம் உயிர்த்தெழும்
மனம் அன்றாடம் மாயுமே
உயிர் வரை நிறைந்துணை
மனம் கொண்டாடி வாழுமே
ஆண் : மரங்கள் சாய்ந்து
கூடு வீழ்ந்தும்
குயில்கள் ராகம் பாடுமே
இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்
நிலவு பொறுமை காக்குமே
ஆண் : மழை வழி கடல் விடும்
விண்காதல் மண்ணை சேருமமே
உன்னை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை
சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா வா
இரவிங்கு தீவாய் பாடல் வரிகள் | Iravingu Theevai Song Lyrics | 96
Reviewed by tamil info
on
July 26, 2019
Rating:
