காற்றிலே நடந்தேனே பாடல் வரிகள் | Kaatriley Nadanthene Song Lyrics | Aadhi Baghavan
பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச
சம கம மப கரி சநிநி நிச
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச
தச தசசநி ரிக மதமதமம…….
மபமபதபப…
ஆண் : காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் என்னை வியந்தேனே
ஆண் : அய்யோ அய்யோ மேகம் போலே
கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோணவில்லை
ரசிகன் கவிஞன் ஆகினேன்
ஆண் : விண்மீன் முதுகில் ஏறினேன்
நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்..
ஆண் : காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
ஆண் : உயிரே உயிரே ரெண்டானதே……ஓ……
இளமை உடைந்து திண்டாடுதே……ஓ…
பாறை கரைந்து பாலானதே
பார்வை நான்கும் கொண்டாடுதே
ஆண் : வானம் எந்தன் தலை தட்டுதே
வார்த்தை என்னுள் கவி கட்டுதே
நீயும்…..நானும்……கேட்காமல்
நாம் ஆனதே
பெண் : மூச்சு காற்றிலே நுழைந்தாயே
பூச்சு பூட்டுகள் திறந்தாயே
நீ யாரடா தேடினேன் முகவரிதானே
வாய் கூசுதே உன் பேரைதான் பேசுதே…..
பெண் : சாரலில் நான் காய்கிறேன்
உன் விழி குடைதானா
ஊமையாய் நான் தேய்கிறேன்
உன் மொழி விடைதானா
பெண் : ரசித்து கவியை நாடினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்
மின்னல் முதுகில் ஏறியே
நானும் கண்டம் தாவினேன்
ஆண் : காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் என்னை வியந்தேனே
பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச
சம கம மப கரி சநிநி நிச
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச
தச தசசநி ரிக மதமதமம…….
மபமபதபப…
