காற்றிலே நடந்தேனே பாடல் வரிகள் | Kaatriley Nadanthene Song Lyrics | Aadhi Baghavan
பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச
சம கம மப கரி சநிநி நிச
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச
தச தசசநி ரிக மதமதமம…….
மபமபதபப…
ஆண் : காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் என்னை வியந்தேனே
ஆண் : அய்யோ அய்யோ மேகம் போலே
கலைந்து கலைந்து போகிறேன்
மெய்யோ பொய்யோ தோணவில்லை
ரசிகன் கவிஞன் ஆகினேன்
ஆண் : விண்மீன் முதுகில் ஏறினேன்
நூறு கண்டம் தாவினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்..
ஆண் : காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
ஆண் : உயிரே உயிரே ரெண்டானதே……ஓ……
இளமை உடைந்து திண்டாடுதே……ஓ…
பாறை கரைந்து பாலானதே
பார்வை நான்கும் கொண்டாடுதே
ஆண் : வானம் எந்தன் தலை தட்டுதே
வார்த்தை என்னுள் கவி கட்டுதே
நீயும்…..நானும்……கேட்காமல்
நாம் ஆனதே
பெண் : மூச்சு காற்றிலே நுழைந்தாயே
பூச்சு பூட்டுகள் திறந்தாயே
நீ யாரடா தேடினேன் முகவரிதானே
வாய் கூசுதே உன் பேரைதான் பேசுதே…..
பெண் : சாரலில் நான் காய்கிறேன்
உன் விழி குடைதானா
ஊமையாய் நான் தேய்கிறேன்
உன் மொழி விடைதானா
பெண் : ரசித்து கவியை நாடினேன்
உன்னில் உன்னில் மூழ்கினேன்
மின்னல் முதுகில் ஏறியே
நானும் கண்டம் தாவினேன்
ஆண் : காற்றிலே நடந்தேனே
காதலை அளந்தேனே
நீ தொட பறந்தேனே
நான் என்னை வியந்தேனே
பெண் : நிச ரீக ரீக ரீக ரீக ரீக நிச
சம கம மப கரி சநிநி நிச
ரீக ரீக ரீக ரீக ரீக ரிச நிச
தச தசசநி ரிக மதமதமம…….
மபமபதபப…
Reviewed by Tamil Info
on
December 04, 2020
Rating:
