மன்னிப்பாயா என கேட்காதே பாடல் வரிகள் | Mannipaya Ena kekathe Song Lyrics | 8 Thottakkal
பெண் : மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே
ஆண் : நானுமே நாளுமே
கரைந்திடும் இரவானேன்
பெண் : காற்றிலே ஊசலாய்
உருகிடும் மெழுகானேன்
ஆண் : கோபம் கொண்டு
நீங்காதே எந்தன் நெஞ்சம்
தாங்காதே
பெண் : அன்பு என்றும்
தீராதே என்னை விட்டு
போகாதே
பெண் & ஆண் : மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே
ஆண் : எப்போதும்
என்னை நீங்காதே
பெண் : எப்போதும்
என்னை நீங்காதே
ஆண் : காலங்கள்
தோறுமே கூடவே
வருவாயே காயங்கள்
ஆற்றிட உன் கரங்களை
தருவாயே
பெண் : காலங்கள் மாறுமே
வேறேதும் மாறாதே
ஏங்குவேன் தாங்கிட
உன் தோள்களை தருவாயே
ஆண் : நீ இல்லாத
நாட்களும் இல்லை
என்று ஆகுமா
பெண் : அன்பே எந்தன்
ஆயுளும் உன்னை விட்டு
நீளுமா
பெண் & ஆண் : வானம்
நாளும் பார்க்கலாம்
எல்லை இன்றி பேசலாம்
நீண்ட தூரம் போகலாம்
அன்பு கொண்டு வாழலாம்
பெண் & ஆண் : மன்னிப்பாயா
என கேட்காதே எப்போதும்
என்னை நீங்காதே
மன்னிப்பாயா என கேட்காதே பாடல் வரிகள் | Mannipaya Ena kekathe Song Lyrics | 8 Thottakkal
Reviewed by tamil info
on
July 26, 2019
Rating:
