Recent comments

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை பாடல் வரிகள் | The Life Of Ram Song Lyrics | 96


ஆண் : கரை வந்த பிறகே….

பிடிக்குது கடலை….

நரை வந்த பிறகே….

புரியுது உலகை….



ஆண் : நேற்றின் இன்பங்கள்

யாவும் கூடியே

இன்றை இப்போதே

அர்த்தம் ஆக்குதே

இன்றின் இப்போதின்

இன்பம் யாவுமே

நாளை ஓர் அர்த்தம் காட்டுமே



ஆண் : வாழா

என் வாழ்வை வாழவே

தாளாமல் மேலே போகிறேன்

தீர உள் ஊற்றை தீண்டவே

இன்றே இங்கே மீள்கிறேன்

இங்கே இன்றே ஆள்கிறேன்



ஆண் : ஹே யாரோபோல்

நான் என்னை பார்க்கிறேன்

ஏதும் இல்லாமலே இயல்பாய்

சுடர் போல் தெளிவாய்



ஆண் : நானே இல்லாத

ஆழத்தில் நான் வாழ்கிறேன்

கண்ணாடியாய் பிறந்தே

காண்கின்ற எல்லாமும்

நான் ஆகிறேன்



ஆண் : இரு காலின் இடையிலே

உரசும் பூனையாய்

வாழ்க்கை போதும் அடடா

எதிர் காணும் யாவுமே

தீண்ட தூண்டும் அழகா…..



ஆண் : நானே நானாய் இருப்பேன்

நாளில் பூராய் வசிப்பேன்

போலே வாழ்ந்தே சலிக்கும்

வாழ்வை மறைக்கிறேன்

வாகாய் வாகாய் வாழ்கிறேன்

பாகாய் பாகாய் ஆகிறேன்



ஆண் : தோ…காற்றோடு

வல்லூரு தான் போகுதே

பாதை இல்லாமலே அழகாய்

நிகழே அதுவாய்



ஆண் : நீரின் ஆழத்தில்

போகின்ற கல் போலவே

ஓசை எல்லாம் துறந்தே

காண்கின்ற காட்சிக்குள்

நான் மூழ்கினேன்



ஆண் : திமிலேரி காளை மேல்

தூங்கும் காகமாய்

பூமி மீது இருப்பேன்

புவி போகும் போக்கில்

கை கோர்த்து

நானும் நடப்பேன்



ஆண் : ஏதோ ஏகம் எழுதே

ஆஹா ஆழம் தருதே

தாய் போல் வாழும் கணமே

ஆரோ பாடுதே….

ஆரோ ஆரிராரிரோ…..

ஆரோ ஆரிராரிரோ…



ஆண் : கரை வந்த பிறகே…..

பிடிக்குது கடலை…

நரை வந்த பிறகே….

புரியுது உலகை…..



ஆண் : நேற்றின் இன்பங்கள்

யாவும் கூடியே

இன்றை இப்போதே

அர்த்தம் ஆக்குதே

இன்றின் இப்போதின்

இன்பம் யாவுமே

நாளை ஓர் அர்த்தம் காட்டுமே



ஆண் : தானே தானே

னானே னே….

தானே தானே னானே னே….

தானே தானே னானே னே…..

தானே தானே னானே னே….



ஆண் : தானே தானே

னானே னே….

தானே தானே னானே னே….

தானே தானே னானே னே…..

தானே தானே னானே னே….

தானே……ஆ….ஆ……
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை பாடல் வரிகள் | The Life Of Ram Song Lyrics | 96 கரை வந்த பிறகே பிடிக்குது கடலை பாடல் வரிகள் | The Life Of Ram Song Lyrics | 96 Reviewed by tamil info on July 26, 2019 Rating: 5

About