ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு பாடல் வரிகள் | Aattukkutti Song Lyrics | 16 Vayathinile
ஆண் : ஆஆ ஆ ஆஅ
ஆஅ ஆஅ
ஆ அ ஆ…
ஆண் : ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையில்ல சாமி
இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா
இன்னும் இருக்குது சாமி
ஆண் : கூத்து மேடை
ராஜாவுக்கு ஏ ஏய் ஏ…..
கூத்து மேடை ராஜாவுக்கு
நூற்றிரெண்டு பொண்டாட்டியாம்
நூற்றிரெண்டு பெண்டாட்டியும்
வாத்து முட்டை போட்டதுவாம்
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு
மொத்தம் இருபத்து ஆறு
பெண் : ஹான்
ஆண் : சின்ன குட்டிகளின் மேல் ஆணை
புது சட்டிகளின் மேல் ஆணை
இரு வள்ளுவன் ஏட்டிலுண்டு
பரம்பரை பாட்டிலுண்டு
கதையில்ல மகராசி
ஆண் : ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையில்ல சாமி
இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா
இன்னும் இருக்குது சாமி
ஆண் : காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
பாட்டெடுத்து பாடிப்புட்டு
நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும்
சாட்சிக்கு வர வா
சம்பந்தம் பண்ண
உனக்கு சம்மதம்தானா
காக்கையில்லா சீமையிலே
பெண் : ஏ ஏ ஏ ஏஹெய்………
காக்கையில்லா சீமையிலே
காட்டெருமை மேய்க்கையிலே
காக்க வச்சி நேரம் பாத்து
பாக்கு வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன்
நீங்க சாட்சிக்கு வாங்க க க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
பெண் : அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மொழி கேளுங்களே
அட ஏண்டி என்ன வஞ்சனைனு
கேக்குறீயே கேக்குறீயே
{பழைய நெனப்புடா
பேராண்டி பழைய நெனப்புடா} (2)
ஆண் : கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன்
சின்னப்பாவை நேரில் பார்த்தேன்
கொட்ட கொட்ட வருகுதம்மா
சங்கீதமா பெருகுதம்மா
ஆண் : வேலைக்கு போனா
எனக்கு ஈடுயில்ல பொண்ணு
பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு
என் திறமையை காட்டட்டுமா
இரண்டு சங்கதியை போடட்டுமா
ஆண் : {ததரின ததரின
ததரின ததரின} (2)
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு பாடல் வரிகள் | Aattukkutti Song Lyrics | 16 Vayathinile
Reviewed by tamil info
on
July 23, 2019
Rating:
Reviewed by tamil info
on
July 23, 2019
Rating:
